Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி : புதுமையான முறையில் அறுவடையான நெற்கதிர்கள் மத்தியில் நூறு சதவிகித வாக்குப்பதிவு உறுதிமொழி ஏற்கப்பட்டது.தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் புதுமையான முறையிலான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இங்குள்ள அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்துப்பட்டு பகுதியில், அறுவடை நடைபெற்றுக் கொண்டிருந்த வயல்வெளியில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களுக்கு மத்தியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் என மொத்தம் நூறு பேர், வாக்குப்பதிவு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீக்தய்யாள் துணை ஆட்சியர் மகாலட்சுமி, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அங்கு மாதிரி வாக்குப்பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விரு நிகழ்ச்சிகளும் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.